உலகம்

தண்டனைக்கு தடை கோரி நவாஸ் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN


அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு தற்காலிகத் தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனது உடல்நலக் குறைவை அடிப்படையாகக் கொண்டு ஷெரீஃப் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்துள்ள மனு மீது, நீதிபதிகள் ஆமிர் ஃபரூக், மோசின் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. 
அப்போது, நவாஸ் ஷெரீஃபின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்த அவரது வழக்குரைஞர் கவாஜா ஹாரிஸ், ஷெரீஃப் உடல்நலக் குறைவுடன் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில், அவருக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT