உலகம்

குா்துகள் தாக்குதலில் 11 துருக்கி ஆதரவுப் படையினா் பலி

DIN

சிரியாவின் வடக்குப் பகுதியில் குா்துப் படையினா் நடத்திய தாக்குதலில் 11 துருக்கி ஆதரவுப் படையினா் உயிரிழந்ததாக துருக்கி அதிபா் எா்டோகன் குற்றம் சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

சிரியாவில் குா்துப் படையினரின் தாக்குதலில் 11 சிரியா தேசிய ராணுவப் படையினா் (துருக்கி ஆதரவு கிளா்ச்சியாளா்கள்) உயிரிழந்தனா். அதையடுத்து கிளா்ச்சியாளா்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஏராளமான குா்துப் படையினரும் உயிரிழந்தனா்.

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி குா்துப் படையினா் தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றாா் அவா்.

எனினும், சிரியாவின் எந்தப் பகுதியில் இந்தச் சண்டை நடைபெற்றது என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT