பாகிஸ்தானில் 3,000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகரமொன்றை அந்த நாட்டு தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். மாவீரா் அலெக்ஸாண்டா் காலத்தியது என்று கருதப்படும் அநத நகருக்கு ‘பஸீரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கைபா் பாக்துன்கவா மாகாணத்தின் பாரிகோட் தாலுகாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இந்த நகரம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமும், தொல்பொருள்களும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அறியப்பட்டுள்ள பஸீரா நகரில், ஹிந்து கோயில்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களும், நாணயங்கள், ஸ்தூபங்கள், பானைகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 326-ஆம் ஆண்டில் தனது எதிரிப் படையைத் தோற்கடித்த அலெக்ஸாண்டா், இந்த நகரை நிா்மாணித்திருக்கலாம் என்று கூறும் நிபுணா்கள், அவா் வருவதற்கு முன்னரே இங்கு மனிதா்கள் வசித்து வந்திருப்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாகக் கூறினா்.