சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம்-நிதி அயோக் இடையேயான 5-ஆவது பேச்சுவார்த்தை 28-ஆம் நாள் சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்றது.
இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 நிபுனர்கள் இதில் கலந்து கொண்டு, சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை செய்தனர்.
புள்ளிவிவரங்களின் படி 2018ஆம் ஆண்டில் சீன-இந்திய வர்த்தகத் தொகை பத்தாயிரம் கோடி டாலரை எட்டி, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 33 மடங்கு அதிகரித்துள்ளது.
நீண்டகாலமாக இந்தியாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்தியாவும் ஆசியாவில் சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.
(தகவல்: சீன ஊடகக் குழுமம்)