பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் செவ்வாய்கிழமை மாலை வரையிலான பலியானோர் எண்ணிக்கை மற்றும் புதன்கிழமை காலை வரையிலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட எண்ணிக்கை விவரங்களை அந்நாட்டு சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி ஒரேநாளில் 11,170 நபர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், 4,605 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,476 ஆக உயர்ந்துள்ளது.
செவ்வாய்கிழமை மாலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு நோய்த் தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 12,868 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.