அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு(கோப்புப்படம்) 
உலகம்

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்: 36 பேர் பாதிப்பு

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

கரோனா வைரஸால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக இருந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 190க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தொற்று பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றன. எனினும் அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

அண்டார்டிகா கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்டார்டிகாவில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடையே கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சிலி ஆராய்ச்சி தளத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் 26 பேருக்கும், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 10 ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அண்டார்டிகா பகுதியில் இருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 பேருக்கு தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT