நார்வேயில் நிலச்சரிவு: 9 பேர் படுகாயம், 200 பேர் இடமாற்றம் (கோப்புப்படம்) 
உலகம்

நார்வேயில் நிலச்சரிவு: 9 பேர் படுகாயம், 200 பேர் இடமாற்றம்

நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

DIN

நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நார்வே தலைநகரான ஓஸ்லோ பகுதியில் இன்று (டிச.30) அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

ஓஸ்லோ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

உடனடியாக தகவலறிந்து 40க்கும் அதிகமான அவசர ஊர்தி வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

வீடுகளை இழந்த 200-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT