நார்வேயில் நிலச்சரிவு: 9 பேர் படுகாயம், 200 பேர் இடமாற்றம் (கோப்புப்படம்) 
உலகம்

நார்வேயில் நிலச்சரிவு: 9 பேர் படுகாயம், 200 பேர் இடமாற்றம்

நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

DIN

நார்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக 200க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நார்வே தலைநகரான ஓஸ்லோ பகுதியில் இன்று (டிச.30) அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

ஓஸ்லோ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

உடனடியாக தகவலறிந்து 40க்கும் அதிகமான அவசர ஊர்தி வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

வீடுகளை இழந்த 200-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT