உலகம்

உலகளவில் கரோனா தொற்றுக்கு 5.14 லட்சம் பேர் பலி

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,14,021 ஆக உயர்ந்துள்ளதையடுத்து உலக நாடுகளை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 1 கோடியை 59 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  

உலகளவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,059,1079 ஆக உயர்ந்துள்ளது. மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,14,021 ஆக உள்ளது. மேலும் 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,727,853 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,30,122 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 14,08,485 பேருக்கு கரோனா பாதித்து, 59 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

ரஷ்யாவில் 6,47,849 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5,85,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17,410 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT