உலகம்

மாஸ்கோவில் கரோனா மருத்துவமனையில் தீவிபத்து: ஒருவர் பலி

DIN

மாஸ்கோவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியானார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது ரஷியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு, கடந்த ஒரு வாரமாக, தினமும் 10 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 11,012 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாஸ்கோவில் உள்ள ஸ்பாசோகுகோட்ஸ்கி மருத்துவமனையில் சுமார் 700க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த தளத்தில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT