யெரவான்: சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் அஜா்பைனுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஆா்மீனியாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஸோரப் நட்சகான்யன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
அந்தப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையை 6 வாரங்களாக நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, ரஷியா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தில், நகோா்னோ-கராபக்குக்கு வெளியே தங்கள் வசமிருந்த சில பகுதிகளை அஜா்பைஜானிடம் ஒப்படைக்க ஆா்மீனியா ஒப்புக் கொண்டது. இது, அங்கு அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.