உலகம்

கலிபோர்னியாவில் நாளை(நவ.21) முதல் முழு பொதுமுடக்கம் அமல்

DIN

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் மாகாணத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக நவம்பர் 21ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக நவம்பர் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 50% அளவு தொற்று பாதிப்பு அதிகரித்ததாக அரசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் நவம்பர் 21ஆம் தேதி முதல் முழுபொதுமுடக்கம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 10 மணி முதல் டிசம்பர் 21 அதிகாலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். முன்னதாக ஓஹியோ, நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களிலும் சமீபத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT