உலகம்

ரஷியாவில் உச்சத்தைத் தொட்ட ஒருநாள் கரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 524 பேர் பலியானதை அடுத்து, ஒருநாள் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத்தொட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 25,487 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,87,990 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 524 பேர் உள்பட இதுவரை 38,062 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், கடந்த நேற்றும், இன்றும் ஒருநாள் பலி 500யைத் தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் பதிவான ஒருநாள் பலி எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். அதேபோன்று ஒருநாள் பாதிப்பும் இன்றைய தினம் அதிகபட்சமாகும். 

தற்போதுவரை 16,85,492 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,64,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT