ஆப்கனில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: 2 மாதங்களில் 6ஆவது நபர்
ஆப்கனில் இன்று மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் இன்று மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கனில் உள்ளூர் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பிஸ்மில்லா அடில் அய்மாக். இவர் இன்று கோர் மாகாணத்தில் உள்ள தாரா இ தைமூர் கிராமத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிஸ்மில்லா அடில் அய்மாக் கோர் மாகாணத்தில் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களில் 6 பத்திரிகையாளர்கள் ஆப்கனில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.