முகப்பு
உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: மாவட்ட காவல்துறை தலைவர் பலி 

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் பலியானார்.

Updated On : 8 ஜனவரி 2021, 4:00 pm IST
பகிர்:

ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் பலியானார்.
ஆப்கானிஸ்தான், கோரியன் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆளுநரின் கட்டடம் மற்றும் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து நேற்று 10க்கும் மேற்பட்ட தலிபான்கள் திடீர் தாக்குதுல் நடத்தினர். 
இதற்கு அந்நாட்டின் பாதுகப்பதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே பல மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் மாவட்ட காவல்துறை தலைவர், பாதுகாப்புப்படை வீரர்கள் என 4 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். 
எனினும் இந்த சண்டை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 
ஆப்கனில் அந்நாட்டின் அரசுக்கும் தலிபான்களும் இடையே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மற்றொருபுறம் இதுபோன்ற தாக்குதல்களை தலிபான்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments