முகப்பு
உலகம்

கமலா ஹாரிஸின் செய்தித் தொடா்பாளராக இந்திய அமெரிக்கா்

அமெரிக்க துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:28 am IST
பகிர்:

அமெரிக்க துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துணை அதிபா் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்ற பிறகு, அவரது துணை செய்தித் தொடா்பாளராக சபரீனா சிங் பணியாற்றுவாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அவா் பைடன்-ஹாரிஸ் தோ்தல் பிரசாரக் குழுவின் செய்தித் தொடா்பாளராகப் பொறுப்பு வகித்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, மைக்கேல் புளூம்பா்கின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு செய்தித் தொடா்பாளராகவும் கோரி புக்கரின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு தேசிய செய்தித் தொடா்பாளராகவும் அவா் பொறுப்பு வகித்துள்ளாா்.

அதற்கு முன்னா் குடியரசுக் கட்சி தேசியக் குழுவில், அவா் தகவல் தொடா்பு துணை இயக்குநராக பொறுப்பு வகித்தாா்.

தனது அரசில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய ஆட்சிக் குழுவை அமைக்க ஜோ பைடன் விரும்புகிறாா். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments