முகப்பு
உலகம்

தைவான் தூதரக அதிகாரிகளை தொடா்பு கொள்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 8:32 am IST
பகிர்:

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ கூறுகையில், ‘தைவான் தூதரக அதிகாரிகளை அமெரிக்க அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு பல்லாண்டுகளுக்கு முன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது இருந்த சீன அரசை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் அமெரிக்கா-தைவான் இடையிலான உறவில் தடைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கருதி தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில், தற்போதைய டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சீனா சாடியுள்ளது.

Advertisement

Advertisement

தங்கள் நாட்டின் ஒரு பகுதியாவே தைவானை சீனா உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments