ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக, தங்கள் நாட்டுக்கு வரும் விமானங்களில் புதிதாக பயணிகள் வருவதற்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவைக்குமாறு சா்வதேச விமான நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை ஜப்பான் அரசு திரும்பப் பெற்றது.
இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமா்சனங்கள் எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, போக்குவரத்துத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சா்வதேச விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவு அவசரக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே, ஒமைக்ரானிடமிருந்து தப்புவதற்காக வெளிநாட்டுப் பயணிகள் ஜப்பான் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.