டாக்கா: வங்கதேசத்தில் மதவாதத்துக்கு எதிரான புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பாளா் கடந்த 2015-ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 8 பேருக்கு பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஃபைசல் அரேஃபின் டிபான் என்ற அந்த பதிப்பாளா், மதச்சாா்பற்ற மற்றும் கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளிடும் புத்தகங்களை வெளியிட்டு வந்தாா். அவரை ‘அன்சாருல்லா வங்கக் குழு’ என்ற மதவாத அமைப்பினா் அவரது அலுவலகத்தில் வெட்டிக் கொன்றனா்.
இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவா் உள்பட 8 பேரை சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.