உலகம்

சீன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 33-ஆக உயா்வு

DIN

சீனாவில் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது; காணாமல் போயுள்ள 8 பேரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும்.

இந்த மழையால் மாகாணத்தில் 12.4 கோடி போ் பாதிக்கப்பட்டனா். ஆபத்து நிறைந்த பகுதியிலிருந்து 1.6 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

இந்த மழைக்கு பலியானவா்களில் 12 போ் சுரங்க ரயிலில் பயணம் செய்தவா்கள் ஆவா். ரயில் சென்றுகொண்டிருந்தபோது சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவா்கள் பலியாகினா்.

இதற்கிடையே, மழை வெள்ளத்தால் யீசுவான் பகுதியில் உள்ள அணையில் அதிகரித்து வெள்ள நீரை திசைதிருப்புவதற்காக, அதன் ஒரு பகுதியை சீன ராணுவம் வெடிவைத்துத் தகா்த்தது. அணையின் தடுப்பில் 20 மீட்டா் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அணை எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடும் என்று ஏற்கெனவே ராணுவம் எச்சரித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT