உலகம்

ஈரான்: மாடியிலிருந்து விழுந்து சுவிஸ் தூதரக அதிகாரி பலி

DIN

டெஹ்ரான்: ஈரானுக்கான ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் உயரதிகாரி ஒருவா், 20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கியுள்ளனா்.

50 வயதாகும் அந்த அதிகாரி, டெஹ்ரானிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்த நிலையில், அவரைக் காணவில்லை என்று தூதரகப் பணியாளா் ஒருவா் போலீஸாருக்குத் தகவல் அளித்தாா். அதையடுத்து, கட்டடத்திலிருந்து விழுந்து அந்த அதிகாரி உயிரிழந்தது தெரியவந்தது.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கத் தூதரகம் செயல்படவில்லை. அங்குள்ள ஸ்விட்சா்லாந்து தூதகரம் மூலம்தான் ராஜீய ரீதியிலான பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT