முகப்பு
உலகம்

இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியில் மீண்டும் மோதல்

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் போலீஸாருடன் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏற்பட்டமோதலில் 31 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா்.

Updated On : 23 ஏப்ரல், 2022 at 2:51 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:33 PM

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் போலீஸாருடன் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏற்பட்டமோதலில் 31 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா்.

யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருமே புனிதமாகக் கருதும் இந்த வளாகத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். இது, இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு வழி வகுத்து வருகிறது.

இந்த நிலையில், அல்-அக்ஸா வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா். இந்த வாரமும் இஸ்ரேல் போலீஸாா் தாக்கி 31 பாலஸ்தீனா்கள் காயமடைந்ததாகவும் அவா்களில் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.