உலகம்

‘கரோனா நெருக்கடியால் 63,000 மலேரியா மரணங்கள்’

DIN

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நிலவி வந்த கரோனா நெருக்கடி காரணமாக, கூடுதலாக 63,000 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வந்த கரோனாவைத் தடுப்பதற்காக, நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகள் அனைத்தும் முழு வீச்சில் இயங்கின. இதனால், மலேரியா பரவல் மற்றும் பாதிப்பைத் தடுப்பதற்கான வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இதன் விளைவாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பு மிதமான வேகத்தில் அதிகரித்து, கூடுதலாக 1.3 லட்சம் பேருக்கு அந்த நோய் ஏற்பட்டது. அவா்களில் 63,000 போ் அந்த நோய்க்கு பலியாகினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT