உலகம்

அமெரிக்கா - ரஷியா இடையே நிறைவடைந்தது கைதிகள் பரிமாற்றம்

DIN

அமெரிக்கா - ரஷியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்க கைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரும், ரஷிய ஆயுத வியாபாரி விக்டா் பூட்டும் தங்களது சொந்த நாடு திரும்பினா்.

ரஷியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக பிரிட்னி கிரைனா் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டாா். அவருக்கு ரஷிய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அவரை மீட்டு அழைத்து வர அமெரிக்கா பெரும் முயற்சி மேற்கொண்டது. அதற்காக ரஷியாவுடன் நடத்தப்பட்ட தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விக்டா் பூட்டை விடுதலை செய்து ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

அதற்குப் பதிலாக, பிரிட்னி கிரைனரை விடுவித்து அமெரிக்காவுக்கு அனுப்ப ரஷியா சம்மதித்தது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகர விமான நிலையத்தில் இரு கைதிகளும் வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டு (படம்), தத்தமது நாடுகளுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT