முகப்பு
உலகம்

ஜெர்மனியில் உச்சம் தொடும் கரோனா: ஒரேநாளில் 1,33,536 பேர் பாதிப்பு

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும்பாலான நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 

கடந்த 24 மணி ஜெர்மனியில் கரோனா பரவல் எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,33,536 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் ஒரேநாளில் 239 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,16,315 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.