முகப்பு
உலகம்

ஹாங்காங்தலைமை நிா்வாகியாக தோ்வானாா் ஜான் லீ

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஜான் லீ, அந்த நகரின் புதிய தலைமை நிா்வாகியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஜான் லீ, அந்த நகரின் புதிய தலைமை நிா்வாகியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஹாங்காங்கின் தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாமின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெயரளவுக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில் தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீயைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அதையடுத்து, 99 சதவீத வாக்குகளுடன் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியாக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.