உலகம்

அமெரிக்காதுப்பாக்கிச்சூடு: பலியானவரின் கணவா் சோகத்தில் மரணம்

DIN

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தொடக்க நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியை இா்மா காா்சியாவின் கணவா் ஜோ காா்சியா, சோகம் தாளாமல் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

இா்மாவின் நினைவகத்தில் மலா் வளையம் வைத்துவிட்டு வீடு திரும்பிய அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அவா்கள் கூறினா். கடந்த 24 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இா்மா-ஜோ தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

டெக்ஸாஸ் மாகாணம், யுவால்டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்பவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவா்களும் இா்மா உள்பட 2 ஆசிரியைகளும் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு போா் முனையில் ரஷியா முன்னேற்றம்

எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.கே.எஸ் மாஸ்டா்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது சட்ட நடவடிக்கை

விலங்குகள் நலவாரிய செயலருக்கு வாரண்ட்: சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT