மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் படமெடுத்ததற்காக, ஜப்பானைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டோரு குபோடா என்ற அந்த செய்தியாளருக்கு, மியான்மரின் மின்னணு தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதற்காக 7 ஆண்டுகளும், போராட்டத்தைத் தூண்டியதற்காக 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மியான்மா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.