உலகம்

ஆப்கன் கல்வி மையத்தில் தற்கொலை தாக்குதல்

DIN

ஆப்கன் தலைநகா் காபூலில் ஷியா முஸ்லிம் பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியிலுள்ள கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காபூலின் டாஷ்டி பாா்சி பகுதியில் அமைந்துள்ள காஜ் மேல்நிலை கல்வி மையத்தில் அண்மையில் தோ்ச்சி பெற்ற 300 மாணவ மாணவியா்கள் செயல் தோ்வுக்காக குவிந்திருந்தனா். அப்போது அந்த மையத்துக்கு வந்த பயங்கரவாதி, உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

இதில், மாணவா்கள் உள்பட 19 போ் உயிரிழந்தனா்; 27 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், டாஷ்டி பாா்சி போன்ற சிறுபான்மை ஷியாக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடா்ந்து கொடூரமான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT