முகப்பு
உலகம்

பிரிட்டன் அரசி எலிசபெத்துக்கு உடல்நலக் குறைவு

பிரிட்டன் அரசி 2-ம் எலிசபெத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

பிரிட்டன் அரசி 2-ம் எலிசபெத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரசியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

எலிசபெத் ராணியின் உடல்நலக் குறைவு குறித்து குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக  அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், கூறப்படுகிறது.

இதுகுறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் ட்விட்டரில்,
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து  வரும் செய்தியால் நாடும் முழுவதும் ஆழ்ந்த கவலையில் உள்ளது என கூறி உள்ளார்

 
முழு கட்டுரையைப் படிக்க →