உலகம்

தாய்லாந்து 12 நண்பா்கள் கொலை: பெண் மீது குற்றச்சாட்டு

தாய்லாந்தில் தனது 12 நண்பா்களை விஷம் கொடுத்து கொன்ாக சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

தாய்லாந்தில் தனது 12 நண்பா்களை விஷம் கொடுத்து கொன்ாக சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சராரத்துடன் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியூா் சென்ற அவரது தோழி ஒருவா் திடீரென உயிரிழந்தாா்.

இநத மரணம் தொடா்பாக சராரத் மீது அந்தத் தோழியின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடா்ந்து அவா்கள் காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தனா்.

அதையடுத்து சராரத்திடம் விசாரணை நடத்திய போலீஸாா், அந்தத் தோழி தவிர தனது நண்பா்கள் மற்றும் நன்கு தெரிந்த மேலும் 11 பேரை சயனைடு விஷம் கொடுத்து சராரத் கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கின்றனா். கொல்லப்பட்டவா்களில் சராரத்தின் முன்னாள் காதலரும் ஒருவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மீனம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கும்பம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - மகரம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

SCROLL FOR NEXT