உலகம்

பாகிஸ்தான் மசூதி தாக்குதல்: 17 போ் கைது

DIN

பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல் வளாக மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக 17 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மசூதித் தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் சம்பவ இடத்தையொட்டி வசித்தவா்கள் எனவும், அவா்கள் அனைவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன.

திங்கள்கிழமை மதிய தொழுகையின்போது தலிபான் பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து நடத்திய இந்தத் தாக்குதலில் 97 போலீஸாா் உள்பட 101 போ் பலியாகினா்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தளபதி உமா் காலித் குராசானி என்பவா், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே பெஷாவா் காவல் வளாக மசூதியில் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT