உலகம்

தஜிகிஸ்தான், ஆப்கனில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

DIN

தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இன்று காலைமுதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தஜிகிஸ்தான் நாட்டில் சீன எல்லைப் பகுதிகளில் இன்று காலை 6.07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது அண்டை நாடுகளான சீனா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலை 6.07 மணிக்கு ரிக்டர் அளவில் 6.7 ஆகவும், காலை 6.25 மணிக்கு ரிக்டர் அளவில் 5 ஆகவும், காலை 7.05 மணிக்கு ரிக்டர் அளவில் 5.2 ஆகவும், காலை 7.37 மணிக்கு ரிக்டர் அளவில் 4.8 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி குறித்த எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இரு வாரங்களுக்கு முன்பு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 45,000 பேர் பலியான நிலையில், அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்ட ஆப்கன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT