உலகம்

அலுவலகத்திற்கு வர மறுக்கும் அமேசான் பணியாளர்கள்

DIN

அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அமேசான் நிறுவனப் பணியாளர்கள் அந்நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்கள் மூடப்பட்டதுடன் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். கரோனா தொற்று இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பின்பற்றி வருகின்றன. 

இந்நிலையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கு அமேசான் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வாரத்தின் 3 நாள்களில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு அதன் பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT