சீனாவில் கனமழை: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவில் பெய்துவரும் கனமழையால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 3 நாள்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப் புயல் சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள புஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில் கோரதாண்டம் ஆடி வருகிறது.
புயல் காரணமாகவும் கனமழை தொடர்வதாலும் சாலைகள் முழுவதும் காட்டாறுகளாக மாறியுள்ளன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஷென்சென், ஜுஹாய் மற்றும் ஜியாங்மென் நகரங்களிலும், ஃபோஷன், டோங்குவான் மற்றும் குவாங்சோவின் சில பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குவாங்டாங் மாகாண வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.