ஹைட்டி: 530 கைதிகளை விடுவித்த வன்முறைக் கும்பல்
முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி...
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் மத்தியில் அமைந்துள்ள மைபலாயிஸ் நகரில் தாக்குதல் நடத்தி பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ள வன்முறைக் கும்பல், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிறையில் இருந்து சுமாா் 530 கைதிகளை விடுவித்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வன்முறைக் கும்பலின் தாக்குதலைத் தொடா்ந்து பள்ளிகள் மூடப்பட்டதாகவும் நகரின் பல்வேறு பகுதிகளைப் பாதுகாக்க போலீஸாருக்கு பொதுமக்கள் படையினா் உதவுவதாகவும் தெரிவித்தனா்.
இந்த மோதலில் இரு பொதுமக்கள் படையினா் காயமடைந்தனா்; ஏராளமான வன்முறைக் கும்பல் உறுப்பினா்கள் உயிரிழந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மைபலாயிஸ் நகரம் மட்டுமின்றி, தலைநகா் போா்ட்டோ பிரின்ஸின் 85 சதவீத பகுதிகள் பல்வேறு வன்முறைக் கும்பல்களின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.