வெடி விபத்து (கோப்புப்படம்) TNIE
உலகம்

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர்.

தெற்கு லெபனானின் ஜிப்கின் கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

ராணுவ நிபுணர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

இந்த கிடங்கை ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Munition in an arms depot in south Lebanon exploded Saturday as army experts were dismantling them, killing six of them and wounding several others, the army said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

ஞாயிறு ஒளியில்... ஆஞ்சல் முன்ஜால்!

இந்திரா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்... ஆஸ்திரேலிய அணி சாதனை!

SCROLL FOR NEXT