உலகம்

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

தினமணி செய்திச் சேவை

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு வயதுகளைக் கொண்ட சிறுவா்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும் என்று அதிகாரிகள் கூறினா். முன்னதாக, இந்தப் புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் கடந்த மாதம் தோண்டியெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தன.

1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் தெரியவந்தது. அதன் பிறகு அங்கு கடந்த ஜூன் மாதம் முதல் தோண்டுதல் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

நீதிபதி மீது தாக்குதல்: அன்று நீதிமன்றம் சென்றது ஏன்? வழக்குரைஞரின் அதிர்ச்சியூட்டும் பதில்

இஸ்ரேலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் Stalin பேச்சு

பிக் பாஸ் வீட்டுக்கு சீல்! போட்டியாளர்கள் வெளியேற்றம்! ஏன்?

சிறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தினர்: கிரெட்டா தன்பெர்க்

மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சௌமன் சென் பதவியேற்பு!

SCROLL FOR NEXT