நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க.  
உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்கவுக்கு (76) அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

இது குறித்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுர அளித்த தீா்ப்பில், விக்ரமசிங்கவை ரூ.1.5 கோடி பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டாா். அவா் உடல்நிலை மிகவும் மோசமாகிவருவதாக அவரது வழக்குரைஞா்கள் கூறியதைத் தொடா்ந்து இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விக்ரமசிங்கவின் ரத்த சா்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் அதிகரித்ததால் அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியிருந்தனா்.

இதையும் படிக்க: ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

2022 முதல் 2024 வரை நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகித்த விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில், தனது மனைவி பேராசிரியை மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவதற்காக பிரிட்டன் செல்ல அரசு நிதியைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிகாரபூா்வ பயணத்தை முடித்துவிட்டு, இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அவா் பிரிட்டன் சென்ாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே விக்ரமசிங்க தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். இலங்கையின் முன்னாள் அதிபா் ஒருவா் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பேடிஎம்' போன் அழைப்பு மோசடி! எப்படி கண்டறிவது?

பூங்காற்று... இஷா தல்வார்!

டெஸ்ட்டில் அதிக 100*..! தோனி, கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! காணொலி வாயிலாக முதல்வர் Stalin பேச்சு!

SCROLL FOR NEXT