முகப்பு
உலகம்

மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!

அமெரிக்காவுக்கு மெக்சிகன் அமெரிக்கா பெயர் சூட்டலாம் என்று பதிலடி

Updated On : 9 ஜனவரி 2025, 8:30 pm IST
கிளாடியா ஷேன்பாம் - டொனால்ட் டிரம்ப்
பகிர்:

மெக்சிகோவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயர் சூட்ட விரும்பிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதில் கிளாடியா ஷேன்பாம் அளித்துள்ளார்.

மெக்சிகோ வளைகுடாவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயரிடலாம் என அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்துக்கு மெக்சிகோ பிரதமர் கிளாடியா ஷேன்பாம் விமர்சனம் தெரிவித்துள்ளார். கிளாடியா கூறியதாவது, ``1607 ஆம் ஆண்டுகளின் வரைபடங்களில் அமெரிக்காவை அமெரிக்கா மெக்சிகானா என்ற பெயரில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஏன் அமெரிக்கா மெக்ஸிகானா என்று அழைக்கக் கூடாது? கேட்க அழகாக இருக்கிறது, இல்லையா? அது உண்மையல்லவா?

மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் தற்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம். மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நடத்தப்படுவதாக தவறான தகவல் டிரம்ப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை, ராணுவத்தின் உதவியோடு நாடுகடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். கனடா, மெக்சிகோ நாட்டு எல்லைகள் வழியாகத்தான் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் முயற்சிக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments