வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (80) தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
தேர்தலில் கலீதா ஜியா 3 தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாகவும், நாடு கடந்த அவரின் மகன் தாரிக் ரஹ்மானும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனவும் கட்சி அறிவித்துள்ளது.
ஆட்சியில் இருந்து கடந்த ஆண்டு அகற்றப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் பிஎன்பி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.