டிட்வா புயல்: இலங்கையில் உயிரிழப்பு 190-ஐ கடந்தது!
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி...
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190-ஐ கடந்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவும் ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் கடந்த வியாழக்கிழமைமுதல் இன்றுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் வெள்ளத்தில் மாயமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ள இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.