இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மூத்த துறவி கைது!
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததன்பேரில் மூத்த துறவி கைது செய்யப்பட்டது குறித்து...
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்பட்டதன்பேரில் மூத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட, பல்லேகம ஹேமரத்னா (71), இலங்கையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலின் முதன்மை துறவியாக உள்ளார்.
விசாரணையில் பாதிக்கப்பட்டவர் 15 வயதான சிறுமி என்றும், அவர் அனுராதபுரத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குழந்தைக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கும் ஹேமரத்னாவுக்கும் எதிராக அனுராதபுரத்தில் உள்ள நடுவர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.