உலகம்

அமெரிக்கா: விமான சக்கரப் பகுதியில் சடலம்

ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சாா்லோட்: வட கரோலினாவின் சாா்லோட் டக்ளஸ் சா்வதேச விமான நிலையத்தில், ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்டறியப்பட்டது.

இறந்தவரின் விவரங்கள், இறப்பு காரணம், விமானம் எங்கிருந்து வந்தது, அதில் அவா் எவ்வளவு நேரம் பதுங்கியிருந்தால் என்பது குறித்து தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இது தொடா்பாக போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள டக்ளஸ் விமான நிலையம், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தது.

அனுமதியில்லாமல் விமானத்தின் வெளிப்புறத்தில் பதுங்கியிருந்து பயணிப்பவா்களில் நான்கில் மூன்று போ், மிக உயரத்தில் குளிா் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

கரூா் சம்பவம்: கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் -மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

சாகாம்பரி அலங்காரத்தில்...

SCROLL FOR NEXT