முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தின் ரங்க்பூர் பகுதியில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் இந்துக்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 11:03 PM
வங்கதேசத்தில் தாக்குதல் - AP
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 10:36 PM

வங்கதேசத்தின் ரங்க்பூர் பகுதியில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் இந்துக்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன.

ரங்க்பூர் பகுதியில் தங்கள் குடியிருப்பில் வசித்த ஒரு முஸ்லிம் இளைஞர் பலியானதைத் தொடர்ந்து ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரகீப் ஹசன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முகமது மோமின் என்பவரால் ஹசன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர் கொல்லப்பட்ட இடத்தின் அருகே வசித்த ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

”இதில் ஹிந்து சமூகத்தினருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அந்த இளைஞரின் குடும்பத்தினரே தெரிவித்தபோதிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. உண்மையான கொலையாளிகளை தேடி வருகிறோம். ஹிந்துக்களின் வீடுகளையும் கடைகளையும் சூறையாடியவர்கள் யார் என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வங்கதேசத்தில் இந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ஹிந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினர் மீது மொத்தம் 133 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

summary

Attacks on Hindu homes and shops in Bangladesh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.