ஆலங்குளம்: கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிய மர்ம கும்பல்
தென்காசி ஆலங்குளம் அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இளைஞர்கள் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில் இன்று (மே 29) மாலை 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், முகமூடி அணிந்துகொண்டு, அப்பகுதியில் இருந்தோர் மீது அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடி விட்டனர்.
அப்பகுதிக்குள் திடீரென நுழைந்த மர்ம கும்பல், சாலையில் சென்றோர், வாகனங்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சுமார் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
சம்பவம் நடந்த பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.