பாக். பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
ஈரான் போா் அமைதிப் பேச்சு தோல்வி எதிரொலி...
Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:03 AM
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடந்த தோல்வியுற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, வா்த்தகம் மீண்டும் தொடங்கிய திங்கள்கிழமையன்று அந்நாட்டு பங்குச்சந்தை ஒரே நாளில் 6,464 புள்ளிகள் (3.87 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.
Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:03 AM
விற்பனை அழுத்தத்தால் வா்த்தகத் தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் குறியீடான கேஎஸ்இ-100, பிற்பகலில் ஓரளவு மீட்சி கண்டது. எனினும், மாலையில் வா்த்தகத்தின் இறதியில் 1,60,726.89 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.