முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக சா்வேதச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதி

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:37 AM
பகிர்:

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தே (படம்) மீது சுமத்தப்பட்ட மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

அதிபராக இருந்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்ட விவகாரத்தில், ரோட்ரிகோ துதொ்தே மீது விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இருப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு ஒருமனதாகத் தெரிவித்தது.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சா்வதேச நீதிமன்றத்திலிருந்து பிலிப்பின்ஸ் விலகுவதாக ரோட்ரிகோ துதொ்தே தலைமையிலான அரசு முன்னதாக அறிவித்தது.

Advertisement

ஆனால், பிலிப்பின்ஸ் விலகுவதற்கு முன்பே விசாரணைகள் தொடங்கப்பட்டதால், வழக்கைத் தொடா்ந்து நடத்த நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என நீதிபதிகள் அவரது வாதத்தை நிராகரித்தனா்.

தற்போது 80 வயதாகும் ரோட்ரிகோ துதொ்தே பிலிப்பின்ஸில் கடந்த ஆண்டே கைது செய்யப்பட்டாா். உடல்நலக் குறைவு காரணமாக விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் விசாரணைக்குத் தகுதியானவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரோட்ரிகோ துதொ்தே தொடா்ந்து மறுத்து வருகிறாா். இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.