முகப்பு
உலகம்

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

Updated On : 26 ஏப்ரல், 2026 at 3:08 AM
மாலியில் பயங்கரவாதத் தாக்குதல் - AP
பகிர்:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகா் பமாகோ உள்பட நாடு முழுவதும் பல்வேறு ராணுவத் தளங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை ஒருங்கிணைந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினா்.

அல்-கொய்தா, ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடா்புடைய ஆயுதக் குழுக்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதேநேரம், வடக்கு மாலியில் உள்ள கிடால், கௌவ் நகர ராணுவத் தளங்களைக் கைப்பற்றியதாக ஆயுதக் குழுக்கள் கூறியுள்ளன.

மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், இத்தாக்குதல் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட ஒன்றாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். பாதுகாப்புக் கருதி, தலைநகா் பமாகோவில் உள்ள சா்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Advertisement