முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் ரயில் விபத்தில் 14 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 28 ஏப்ரல், 2026 at 2:59 PM
விபத்துக்குள்ளான ரயில்கள் - AP
பகிர்:

இந்தோனேசியாவில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் வேகமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிகை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது நீண்ட தூர அதிவேக ரயில் ஒன்று வேகமாக பின்பக்கம் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

ஜகார்த்தாவில் உள்ள பெகாசி நகர ரயில் நிலையத்தில் ஜகார்த்தா முதல் சிகரங் வரை செல்லும் பயணிகள் ரயில் மீது ஜகார்த்தா - சுரபாயா இடையே ஓடும் இந்தோனேசியாவின் அதிவேக ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. 100-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவில் போக்குவரத்து விபத்துகள் வழக்கமாக நடைபெறுவதே. அங்கு பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்பட பழையதாகவும் முறையான பராமரிப்பற்றதாகவும் உள்ளன.

இதற்கு முன்னர், மேற்கு ஜாவா பகுதியில் 2024-ல் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 பேர் பலியாகி 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

summary

Train Accident in Indonesia! Death Toll Rises to 14!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.