பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழந்தனா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழந்தனா்.
ஜியாரத் மாவட்டத்தில் உள்ள மங்கி அணை பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த இத்தாக்குதலில் மேலும் 5 போலீஸாா் மாயமாகியுள்ள நிலையில், அவா்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த காவலா்களுக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘நாட்டின் அமைதிக்காக உயிா்த்தியாகம் செய்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாத சக்திகள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.
Advertisement
Advertisement
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.